Berita Gerakan

எம்பிகளுக்கான வெ 3 லட்சம் ஒதுக்கீடு: மக்களுக்கு உடனடியாக பயனடைய செய்ய வேண்டும்

Jul 15, 2021

கோலாலம்பூர் ஜூலை 15
மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து எம்பிகளுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் வழங்கிய தலா 3 லட்சம் வெள்ளி உடனடியாக மக்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அம்மக்களின் நலன்களுக்காகவே எம்பிக்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார் அவர்.
மத்திய அரசாங்கத்திடமிருந்து இந்த ஒதுக்கீட்டை பெற்றுள்ள எம்பிக்கள் எவ்வித தாமதமும் இன்றி மக்களுக்கு உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட் 19 தாக்கத்தால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர அரசியலில் அல்ல என அவர் நினைவுறுத்தினார்.
பொது முடக்கத்தால் துயரத்தில் மூழ்கியுள்ள மக்களுக்கு பொறுப்புள்ள எம்பி களாக தேர்ந்தெடுத்து பிரதிநிதிகள் நடந்து கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்

உதவிகளுக்கு தவிக்கும் மக்களுக்கு உடனடியாக சென்று உதவுவதே எம்பிக்களின் கடமை என்றார் அவர்.