Berita Gerakan

பினாங்கில் டெல்தா தொற்று பரவுவதை தடுக்க வேண்டும்

Sep 2, 2021

ஜோர்ஜ்டவுன் செப் 1
பினாங்கில் அபாயகரமான டெல்தா வெரியன்ட் தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இருக்கவேண்டுமென பினாங்கு கெராக்கான் தலைவர் ஓ தோங் கியோங் கூறினார்.

இந்த அபாயகரமான தொற்று பெரும் பாதிப்பை கொண்டு வரும் என்பதால் மாநில அரசாங்கம் மெத்தன போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்றார் அவர்.
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை பினாங்கில் 31 டெல்தா வெரியன்ட் தொற்று பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் பினாங்கில் சிவப்பு மண்டல பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

பினாங்கில் இதர மாநிலங்களில் ஒப்பிடுகையில் கோவிட் 19 தினசரி தொற்று மோசமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.